பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி; மக்கள் அதை ஏற்கமாட்டார்கள் : திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பரபரப்பு பேட்டி!!
நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைபோல நான்தான் முதல்வர் என்று எடப்பாடி கூறிக்கொண்டே இருக்கிறார். அதிமுகவை சீரழிப்பதற்குதான் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. டிரம்ப் கூறியதை யாரும் நம்பாததுபோல் எடப்பாடி பழனிசாமி கூறுவதையும் யாரும் ஏற்கவில்லை. எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்தாலும் அக்கட்சியை அழிப்பதே பாஜகவின் நோக்கம். கூட்டணி ஆட்சி நடக்கும் அதில் பாஜக இடம்பெறும் என்றுதான் அமித் ஷா கூறிவருகிறார். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று நேற்றுதான் பழனிசாமி கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக தலைவர்கள் மன வருத்தத்தில்தான் உள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல, அதிமுகவை அழிப்பதே நோக்கம்.
அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைந்தாலும் 10 நாளில் ஆட்சியை கலைத்து பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் ஆகிவிடுவார். மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் என பிரச்சாரம் செய்துவிட்டு பட்னவிஸை முதல்வராக்கியது பாஜக. 7 முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியும் அதிமுக ஒற்றுமைக்கு ஒத்துழைக்கவில்லை அன்வர் ராஜா. தமிழ்நாட்டு மக்கள் அதிமுக, பாஜக கூட்டணியை விரும்பவில்லை. என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப்பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி; மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். நிச்சயமாக மு.க.ஸ்டாலின் | மீண்டும் முதலமைச்சராவார்.
தலைவன் மீது நம்பிக்கை வைத்துதான் தமிழ்நாடு மக்கள் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இனி வருவார்களா என்பதும் சந்தேகம்தான்.மொழிக்கு ஆபத்து வருகிறபோது ஒன்றிய அரசோடு போராடி பாதுகாப்பவர் மு.க.ஸ்டாலின். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கான எதிர்ப்பை கூர்மைப்படுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான். திமுகவில் என்னை இணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."இவ்வாறு தெரிவித்தார்.