தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டி.கே.சிவகுமார் திடீர் டெல்லி பயணம் கர்நாடக அமைச்சரவை நவம்பரில் விரிவாக்கம்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம், நவம்பர் புரட்சி என்று பேசப்படுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டரை ஆண்டுக்குப் பிறகு டி.கே.சிவகுமார் முதல்வராவார் என்று காங்கிரஸ் 2023ம் ஆண்டு மே மாதம் ஆட்சியமைக்கும் போதே கூறப்பட்டது.

Advertisement

அதிகாரப்பகிர்வு என்ற உடன்படிக்கையின் பேரிலேயே சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தவகையில், இரண்டரை ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் என்றும், நவம்பரில் அரசியல் புரட்சி நடக்கும் என்றும் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவ்வப்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்நிலையில், பெலகாவியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ‘அமைச்சரவையை விரிவாக்கம் செய்யுமாறு 4 மாதங்களுக்கு முன்பே கட்சி மேலிடம் என்னிடம் கூறியது.

ஆனால் நான் தான், இரண்டரை ஆண்டுக்குப் பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்யலாம் என்று கூறினேன். எனவே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்ததும், இதுதொடர்பாக மீண்டும் கட்சி மேலிடத் தலைவர்களுடன் ஆலோசிப்பேன். அவர்களது ஆலோசனையின் படி செயல்படுவேன். நவம்பர் 16ம் தேதி டெல்லி செல்கிறேன்.

அப்போது மேலிடத் தலைவர்களைச் சந்தித்து பேசுவேன்’ என்றார். இந்த பரபரப்புக்கு இடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று டெல்லி சென்ற நிலையில், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் அவ்வப்போது டெல்லி செல்வது வழக்கம். அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் சித்தராமையா பேசுவார் என்று கூறினார்.

Advertisement

Related News