தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையாகி வரலாற்று உச்சம்: வெள்ளி விலையும் போட்டி போட்டு எகிறியது
சென்னை: தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது. கடந்த 4ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.87,600க்கும் விற்பனையானது. இதே போல அன்றைய தினம் வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயந்த்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வார தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை தான் சந்தித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,060க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.88,480க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சம் கண்டது.
தங்கத்தை போல வெள்ளி வெள்ளி விலையும் நேற்று காலை உயர்ந்தது. நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.166க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலையேற்றத்தை தாங்குவதற்குள் மாலையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.89,000க்கு விற்பனையானது. இந்த விலை என்பது என்பது இதற்கு முன்னர் இருந்த அனைத்து விலையையும் முறியடித்து வரலாற்று உச்சம் கண்டது. அதே போல ேநற்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.167க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து, பார் வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.