தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளிக்கு சென்றவர்கள் 11 நாட்களுக்கு பின் திரும்பினர் விஜய் பிரசார பலி வழக்கு சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை: எஸ்ஐடி அளித்த 1,316 பக்க விசாரணை அறிக்கையை மொழி பெயர்க்கும் பணி தீவிரம்

கரூர்: தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் நேற்று கரூர் திரும்பினர். தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டருடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் வந்த சிபிஐ அதிகாரி பிரவீன்குமார், ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு காரில் சென்று 5 நிமிடம் பார்வையிட்டனர்.

Advertisement

இதை தொடர்ந்து அதிகாரிகள் தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றனர். சிபிஐ இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தலைமை காவலர், சிறப்பு புலனாய்வு குழு அளித்த 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை சரிபார்ப்பு மற்றும் மொழி பெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சொந்த ஊரிலிருந்து சிபிஐ அதிகாரிகள், 11 நாட்களுக்கு பின் நேற்று காலை 8 மணியளவில் கரூர் திரும்பினர். அவர்கள் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்தபின் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும், குடும்பத்தினரை பயணியர் விடுதிக்கு வரவழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் நேற்று மதியம் 3 மணிக்கு பயணியர் விடுதிக்கு வரவழைக்கப்பட்டார். அவருடன் சுமார் ஒரு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

Advertisement

Related News