தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு

சென்னை: தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,800ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.5,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,100ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.4,100ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது.

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதிலும் முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், சொந்த ஊருக்கு செல்பவர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும் என்பதால் ஆம்னி பேருந்துகளையே நம்பி இருக்க வேண்டியதுள்ளது. இதனால், கடைசி நேரத்தில் இந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கேட்டால் தலையே சுற்றி விடும் நிலைக்கு பயணிகள் ஆளாகுகின்றனர். காரணம், டிக்கெட்டின் விலையை பல ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொள்ளை அடிக்க தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,800ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.5,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,100ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.4,100ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,200ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.3,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமான நாட்களில் ரூ.600 முதல் ரூ.900 வரை வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,600ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமாக ரூ.1,500 வசூலிக்கப்படும், தற்போது ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது.

Advertisement

Related News