தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை; பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனை. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250,காத்திருக்கும் புயல்கள் பன்னீர் ரோஸ் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளனர். புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர். பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250,காத்திருக்கும் புயல்கள் பன்னீர் ரோஸ் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.