தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: 4 பேரிடம் விசாரணை
Advertisement
இதனைத் தொடர்ந்து மாதச் சீட்டு கட்டியவர்களுக்கும் தீபாவளிச் சீட்டு கட்டியவர்களுக்கும் பணம் மற்றும் நகைகள், இனிப்புகள் வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பாரதி வீட்டுக்குச் சென்று கேட்டபோது அங்கிருந்து பாரதி மற்றும் அவரது மகன்கள் குகன் (22), பாரத் (19) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் குமார், அவரது மனைவி பாரதி, மகன்கள் குகன், பரத் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement