தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பலகாரங்களில் பெரும் மோசடி: ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு.! உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

லக்னோ: தீபாவளி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேசத்தில் கலப்பட உணவுப் பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 8 முதல் 17ம் தேதி வரை ‘தீபாவளி சிறப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

மாநிலம் முழுவதும் 6,075 ஆய்வுகள் மற்றும் 2,740 திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, 3,767 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன. இந்த அதிரடி சோதனையில், சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான கலப்படப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில், எளிதில் கெட்டுப்போகும் தன்மை கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான சுமார் 1,871 குவிண்டால் தரமற்ற உணவுப் பொருட்கள், மீண்டும் சந்தைக்கு வராமல் தடுக்கும் நோக்கில் உடனடியாக அழிக்கப்பட்டன. குறிப்பாக, லக்னோவில் இனிப்புக் கடைகள், உற்பத்தி நிலையங்கள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகளில் இந்த சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டன.

இதில் 5,000 கிலோவுக்கும் அதிகமான கோவா, இனிப்புகள் மற்றும் பிற பால் பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும், 223 கிலோ தரமற்ற நெய்யும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களை வாங்கும் போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் இருந்தால், உணவுப் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Related News