தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு: போக்குவரத்து தொடர்ந்து சீரமைப்பு

அண்ணாநகர்: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிகமாக வருவார்கள். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது இதை பயன்படுத்தி சமூகவிரோத கும்பல்கள், பொதுமக்களிடம் வழிப்பறி உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது; தீபாவளி பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து பாதிக்கக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நெரிசலை தடுக்க 250க்கும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அனைத்து மார்க்கெட்டிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசலில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. சொந்த ஊருக்கு சென்று மீண்டும் 21ம்தேதி வருவார்கள் என்பதால் 23ம்தேதி வரை போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement

Related News