தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகையொட்டி பல மடங்கு கட்டணம் வசூல் ஆம்னி பஸ்கள் இன்றைக்குள் குறைக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

அரியலூர்: தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களில் நிர்ணயித்து உள்ள கூடுதல் கட்டணத்தை இன்றைக்குள் குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர்.

Advertisement

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது. காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால், பலர் ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்காக காத்திருக்கின்றனர்.

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதிலும் முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி 3 மடங்கிற்கும் மேல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். உதாரணமாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் அனைத்தும் குறைந்தபட்சம் ரூ.2400 முதல் ரூ.5500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 வசூலிக்கப்படும். ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட ஆம்னி பேருந்தில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர்.

இதேபோல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் விமானக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக விடப்பட்ட டெண்டர் அடிப்படையில், கடந்த காலங்களை போலவே தீபாவளி பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும். அது மட்டுமில்லாமல் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களான கும்பகோணம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் போக்குவரத்து கழகங்களும் டெண்டர் அடிப்படையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவர்களை அழைத்து பேசியதன் பேரில் அவர்கள் நிர்ணயித்திருந்த தொகையை விட குறைத்து பேருந்துகளை இயக்கினார்கள். கடந்த ஆயுத பூஜை விடுமுறை காலங்களில் ஒரு சில ஆம்னி பேருந்துகள் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த தகவலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறேன். அவர்களும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து நிறுவனங்கள் இருக்கின்ற சூழலில் 10 நபர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். நாளைக்குள் (இன்று) அவர்கள் அந்த கட்டணத்தை குறைக்காவிட்டால் தீபாவளிக்கு முன்பாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* முதல்வரிடம் மாணவி கோரிக்கை கிராமத்துக்கு உடனே பஸ் சேவை

அரியலூர் மாவட்டம் ஆதனூரை சேர்ந்த அகஸ்தியா என்ற மாணவி ``கல்வியில் சிறந்த தமிழ்நாடு’’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக முதல்வரால் பாராட்டு பெற்றார். தற்போது தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். இவர், தங்களது கிராமத்திற்கு கூடுதல் பேருந்து வசதி வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். மாணவியின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஆதனூர் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து வசதி நேற்று அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

* சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு குழுக்கள், முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை நேரில் அழைத்து பேச போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Advertisement