தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பரிசாக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

 

Advertisement

புதுடெல்லி: தீபாவளி பரிசாக, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த உயர்வு அறிவிக்கப்படும். விலைவாசியை கருத்தில் கொண்டு மாதாந்திர விலை குறியீடு அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படும்.

கடந்த ஜனவரி மாதத்தின்படி ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் அதிகரிப்பால் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,084 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் 49.19 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்

பட்டுள்ளது. கடந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக, அக்டோபர் 16 அன்று ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரசு ஊழியரின் சம்பளம் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் போக்குவரத்துப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அவர்களின் மொத்த வருமானத்தில் 51.5% ஆகும். அகவிலைப்படி தோராயமாக 30.9 சதவீதம், வீட்டு வாடகை படி சுமார் 15.4% மற்றும் பயணப்படி சுமார் 2.2 சதவீதம் இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி விகிதம் 50% ஆகவும் இருந்தால், அகவிலைப்படி தொகை ரூ.18,000-ல் 50% ஆக இருக்கும், அதாவது ரூ.9,000. இந்த ரூ.9,000 அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு சம்பளம் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Related News