தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளிக்கு துணிகள் எடுத்துவந்தபோது பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில் பெண் பலி; கணவர், 2 குழந்தை காயம்

 

Advertisement

அண்ணாநகர்: பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில் பெண் பலியான நிலையில், அவரது கணவர், 2 குழந்தைகள் காயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர். தீபாவளிக்கு துணி எடுத்து திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர்.

இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல மாலுக்கு குடும்பத்தினர் அனைவரும் பைக்கில் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக நேற்றிரவு 11.30 மணி அளவில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் வந்துள்ளனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த ஆம்னி பஸ், திடீரென்று அவர்களது பைக் மீது மோதியுள்ளது.

இதில், திவ்யா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை பார்த்ததும் பொதுமக்கள் ஓடிவந்தபோது ஆம்னி பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து காயத்துடன் கிடந்த சிவச்சந்திரன், அவரது இரண்டு குழந்தைகளை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகு திவ்யா உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து ஆம்னி பேருந்து டிரைவரை தேடிவந்த நிலையில், இன்று அதிகாலையில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் டிரைவர் சரணடைந்தார். அவரிடம் விசாரித்தபோது பாலவாக்கம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிந்தது.

Advertisement

Related News