தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் மனமுவந்து விவாகரத்து வழங்கக்கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பாடகி சைந்தவி மனு: ஒரே காரில் ஒன்றாக திரும்பி சென்றனர்

Advertisement

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் -பாடகி சைந்தவி ஆகியோர் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 12 ஆண்டுகள் கணவன், மனைவியாக இருந்தார்கள். இந்நிலையில் யாருமே எதிர்பாராவிதமாக கடந்த 2024ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.

இதையடுத்து, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகினார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து, இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News