தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலதரப்பட்ட நம்பிக்கைகளும், கலாச்சாரமும்தான் நாட்டின் அழகு முஸ்லிம் போலீசார் தாடி வளர்க்கலாம்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பல்வேறு மதங்கள், கலாச்சாரம் உடைய இந்தியாவில், போலீஸ்காரர்களாக பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைத்துக்கொள்ளலாம் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் அப்துல் காதர் இப்ராஹிம். போலீஸ்காரரான இவர், தாடி வைத்திருந்ததால் தனது ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த மதுரை காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு: மதுரையில் முதல் நிலை காவலராக இருக்கும் மனுதாரர், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் தாடி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். 2018ம் ஆண்டு நவம்பர் 9 முதல் டிசம்பர் 9 வரை 31 நாட்கள் முறையான அனுமதி பெற்று மெக்கா, மெதினா சென்றுள்ளார். பின்பு இடது காலில் பாதிப்பு ஏற்பட்டதால், விடுப்பை நீட்டிக்குமாறு டிசம்பர் 10ம் தேதி உதவி காவல் ஆணையரிடம் கோரியுள்ளார். அவருக்கு விடுப்பு நீட்டிக்கப்படாததோடு, தாடி வைத்திருந்ததால் அது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து சாட்சிகளையும் முறையாக விசாரிக்காமல், 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement

பின்னர் மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் அவர் முறையிட்ட நிலையில், அது இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டது இந்தியா. பலதரப்பட்ட குடிமக்களின் நம்பிக்கைகளும், கலாச்சாரமும் ஒருங்கிணைந்ததுதான் இந்நாட்டின் அழகும், தனித்துவமும். மனுதாரர் தரப்பில், காவல்துறையில் இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் இருக்கும் போது நேர்த்தியாக தாடி வைத்துக்கொள்ள அனுமதி வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை சட்ட விதிகளிலும் இதற்கு அனுமதி உண்டு. எனவே தாடி வைத்துக்கொள்ள தடை விதிக்க முடியாது. இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள், வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. மனுதாரர் மீண்டும் பணியில் சேர்ந்து உடல்நலக்குறைவுடன், அது தொடர்பான மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு கோரி உள்ளார். அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, தண்டனையை மாற்றியமைத்த மதுரை காவல் ஆணையரின் உத்தரவு அதிர்ச்சியூட்டும் வகையில், ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. ஆகவே, மனுதாரருக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, 8 வாரங்களுக்குள் மதுரை மாநகர காவல் ஆணையர் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

Advertisement