தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கைவிடுப்பு

 

Advertisement

ராணிப்பேட்டை: பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திராவின் கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 340 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் பொன்னை ஆற்றில் மக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பியதை அடுத்து அதில் இருந்து வெளியேறும் நீரால் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 10,188 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களான பாலே குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாத்தாண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் திருவலம் அருகே உள்ள வெப்பாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (60) என்பவர் வெப்பாலை அருகே பொன்னை ஆற்றின் மையப் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த வெள்ளத்தில் முதிவரும் அவரது மகனும் சிக்கிக்கொண்டனர். ஆடுகளும் சிக்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில் சென்ற தீயணைப்பு மீட்புக் குழுவினர் ஆற்றில் இறங்கி, ஜெயசீலனையும், அவரது மகனையும் மீட்டனர். 10 ஆடுகளும் மீட்கப்பட்டது. மேல்பாடி போலீசாரும் மீட்புப் பணியில் உதவினார்கள்.

Advertisement