தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு வீடு வீடாக விண்ணப்பங்கள் வினியோகம்

*கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு
Advertisement

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்வதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்க வருகின்ற ஜூலை 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 10,000 இடங்களில் 15 அரசு துறைகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு 46 சேவைகள் வழங்குவதுடன் கலைஞர் உரிமை தொகைக்கான முகாமும் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கான பணிகள் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் வருவாய் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று முகாமில் வழங்கப்படும் சேவைகள், பயன்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் விடுபட்ட மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்து எங்கு முகாம் நடைபெறுகிறது, என்னென்ன திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் மற்றும் விண்ணப்ப படிவம் வழங்கி தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை நகராட்சி 14வது வார்டில் தியாகி மாணிக்கநாயக்கர் தெருவில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டி தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் விநியோகிப்பதை மாவட்ட கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு உங்களுக்கான பயனை பெற வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக வாலாஜா நகராட்சி 2வது வார்டிற்கு உட்பட்ட சுப்பராயர் தெருவில் வீடுவீடாக விண்ணப்பங்கள் வழங்குவதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகள் விவரங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை ஆர்டிஓ ராஜராஜன், தாசில்தார் ஆனந்தன் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் ப்ரீத்தி, இளையராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement