தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சிலை கரைப்பில் தகராறு; தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை: தந்தை, மகன் கைது

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுமயங்குடியை சேர்ந்த புவியரசன் மகன் ஹரிஹரகுமார்(26). ஐடிஐ முடித்து விட்டு போர்வெல் குழாய் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சற்குணம்(26). விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காளியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை கடந்த 30ம்தேதி இரவு ஊர்வலமாக எடுத்து சென்று வாய்க்காலில் கரைக்கப்பட்டது. அப்போது ஹரிஹரகுமாருக்கும், சற்குணத்துக்கும் தகராறு ஏற்பட்டது. மற்றவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertisement

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காளியம்மன் கோயில் அருகே நின்று ஹரிஹரகுமார் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அங்கு பன்னீர்செல்வம், மகன் சற்குணம் மற்றும் நண்பர்கள் முகிலன், சஞ்சய், சரவணன் ஆகியோர் வந்தனர். அப்போது விநாயகர் சிலை கரைப்பு தகராறு பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம், சற்குணம் ஆகியோர் ஹரிஹரகுமாரை சரமாரி தாக்கினர். இதில் தடுமாறி விழுந்த அவரது தலையில் கல்லை தூக்கி போட்டதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வம், சற்குணம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement

Related News