தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச யுபிஎஸ்சி பயிற்சி

சென்னை: அனைத்து தடைகசங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:  சுதந்திர தினத்தையொட்டி, பிரஜாஹிதா அறக்கட்டளை மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் தனித்துவமான யுபிஎஸ்சி பயிற்சியான ‘சேது’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தடைகளையும் உடைத்து, திறமையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் சிவில் சர்வீஸ்களில் சம வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் இருந்து 30 முழுமையான கல்வி உதவித்தொகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில், மொத்தம் 400 கல்வி உதவித்தொகைகளை வழங்கும் இலக்குடன், மாற்றுத்திறனாளிகளின் அரசியல் மற்றும் நிர்வாக துறைகளில் ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கும். உதவித்தொகை தேர்வு ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும்.

அன்று நாடு முழுவதும் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி மையங்களில் தேர்வு நடைபெறும். பாடக் கட்டணம், உதவி தொழில்நுட்பம் மற்றும் கற்றல் உபகரணங்களைச் சேர்ந்த முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேர்வுகளில் எழுத்தாளர், கூடுதல் நேரம், கையசை, மொழிபெயர்ப்பு, அணுகுமுறை மாதிரி தேர்வுகள் போன்ற வசதிகள் செய்து தரப்படும். இளைஞர்களை தேச சேவைக்காக உருவாக்கும் கனவுடன் இந்த அகாடமி தொடங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related News