தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லீரல் பாதிப்பு காரணமாக இயக்குனர் திடீர் மரணம்

Advertisement

சென்னை: சென்னையில்கல்லீரல் பாதிப்பு காரணமாக இயக்குனர் சுரேஷ் சங்கையா திடீர் மரணம் அடைந்தார். விதார்த், ரவீணா ரவி நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’, பிரேம்ஜி அமரன் நடித்த ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர், சுரேஷ் சங்கையா (41). கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு தனிஸ் பாத்திமா பக்கீர் என்ற மனைவியும், ஆதிரா என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

ஒரு மாதத்துக்கு முன்புதான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ‘சத்திய சோதனை’ படத்துக்குப் பிறகு செந்தில் நடித்த படத்தையும், யோகி பாபு நடித்த படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார். இவ்விரு படங்களின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், திடீரென்று இயக்குனர் சுரேஷ் சங்கையா மறைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement