தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேரடி நியமனம் மூலம் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: கூடுதல் எஸ்பி நியமனம் வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.பார்த்திபன், அமீர் அகமது, கே.கிருத்திகா, எஸ்.ரித்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-2016ல் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று ஏடிஎஸ்பியாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டோம். கடந்த 2015ல் 26 டிஎஸ்பி பணி இடங்களும், 2016ல் 34 பணியிடங்களும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டன. கடந்த 1987, 1996, 1997 பேட்சுகளில் பணியில் சேர்ந்த 499 பேர் டி.எஸ்.பிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014லிருந்து 124 பேர் மட்டுமே நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளோம். ஆனால், பணியிட மாற்றம் பெற்ற இன்ஸ்பெக்டர்கள் 499 பேர் டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

நாங்கள் டிஎஸ்பிக்களாக 4 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் எங்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த நிலையில், 2022 மே 20 முதல் 2024 டிசம்பர் 17ம் தேதிவரை 193 தற்காலிக டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தின் உத்தரவு மற்றும் உரிய பேனல் பட்டியல் இல்லாமல் கூடுதல் எஸ்பிக்களாக தேர்வாக முடியாது. ஆனால், தற்காலிக டிஎஸ்பிக்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2024 மார்ச் 12ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தகுதியில்லாதவர்கள் 57 இன்ஸ்பெக்டர்களை டிஎஸ்பிகளாகவும், 38 டிஎஸ்பிக்களை கூடுதல் டிஎஸ்பிக்களாகவும் தற்காலிகமாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 44 கூடுதல் எஸ்பிக்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவது குறித்து கடந்த 2024 டிசம்பர் 17ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்காலிக கூடுதல் எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்க தற்போது பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 197 பணியிடங்களில் நேரடி நியமனமாக 4 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 193 பணியிடங்கள் தற்காலிகமாக டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பணியிட மாற்றம் மூலம் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே டிஎஸ்பியாகவும், அதை தொடர்ந்து கூடுதல் எஸ்பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எங்களைப் போன்ற தகுதியானவர்கள் நிராகரிக்கப் படுகிறார்கள். எனவே, தற்காலிக டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்க வகை செய்யும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். மனுதாரர்களான எங்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு தர வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. கூடுதல் எஸ்பி பணி தொடர்பான அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. தமிழக அரசும், டிஜிபியும் நேரடிநியமனம் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் நியமனம் ெசய்யப்பட்டவர்களிடையே தகுதி அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியலை தயார் செய்ய வேண்டும். அரசாணையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகுதியான தேர்வு பட்டியல் தயாரிக்கும்வரை எந்த பதவி உயர்வும் வழங்க கூடாது. நேரடி நியமனம் மற்றும் பதவி மூப்பு அடிப்படையில் உள்ளவர்களில் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் இருந்தால் அவர்களுக்கு உத்தேசமான பதவி உயர்வும், சீனியாரிட்டியும் தரலாம் என்று உத்தரவிட்டார்.

Advertisement

Related News