தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியில் தீப்பாஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு: மர்ம நபருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். நேற்று இரவு மர்ம நபர்கள், கோயில் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த, உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்து பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து, புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
Advertisement

விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில் கோயில் கேட் ஏறி உள்ளே குதித்த மர்ம நபர் கோயிலில் வைத்திருந்த கடப்பாறையால் முதலில் அம்மன் வைத்திருக்கும் அறையின் கிரில் கேட்டை உடைக்க முயற்சித்து அது முடியாததால் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை அள்ளிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்த உண்டியலில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை காணிக்கையாக வந்திருக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை புல்லரம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசூரி தெருவில் நாகலிங்கம் ஸ்டோர் என்ற மளிகை கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்து ரூ.4 ஆயிரம் திருடு போயுள்ளது. அதே தெருவில் உள்ள முருகன் ஸ்டோர் என்ற மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் திருடு போகவில்லை என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.  ஒரே நாளில் மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்தும், கோயில் உண்டியலை உடைத்தும் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News