தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் வருவாய், நிதி, கல்வி நிதியில் முறைகேடு; ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015-16 முதல் 2018-19ம் ஆண்டுகளின் கணக்குகளை தணிக்கை செய்தபோது ரூ.17,73,16,820க்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கையில் வருவாய், முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி பாதாள சாக்கடை நிதி, தொடக்கக் கல்வி நிதி ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது. சொத்து வரியில் ரூ.18 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலம் வாங்கப்பட்ட 137 குப்பை தொட்டிகளுக்கு தலா ரூ.19,834 பதில் ரூ.37,750 விலை கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக ஆணையர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பாக 2015 -18 வரை ஆணையராக இருந்த மனோகர், முன்னாள் துணை வருவாய் அலுவலர் சாரங்கர சவரணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. நிர்வாக பொறியாளர் கணேசன், துணை பொறியாளர்கள் மாரியப்பன், சாமிநாதன், சென்னை சுசி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News