தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஜிட்டல் தளங்களில் மோசமான பதிவுகளை தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்ற குழுவிடம் ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: டிஜிட்டல் தளங்களில் ஆபாசமான பதிவுகளை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்ட கட்டமைப்பு தேவை என ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை கூறி உள்ளது. யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஆபாசமான, மோசமான பதிவுகள் பெருகிவிட்டன. இவற்றை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்வது குறித்து பாஜ எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழு ஒன்றிய அரசிடம் கடந்த 13ம் தேதி கேட்டிருந்தது.
Advertisement

இதற்கு பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘‘டிஜிட்டல் தளங்களில் ஆபாசமான மற்றும் வன்முறை பதிவுகளை வெளிப்படுத்த, அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமையான கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது சமூகத்தில் கவலைகளை அதிகரித்து வருகிறது.

தற்போதைய சட்டங்களில் சில விதிகள் இருந்தாலும், இத்தகைய மோசமான பதிவுகளை ஒழுங்குப்படுத்த கடுமையான மற்றும் புதிய சட்ட கட்டமைப்பு அவசியமாகிறது. இதை அமைச்சகம் கவனத்தில் கொண்டு புதிய சட்டம் உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement