தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஜிட்டல் கைது என கூறி பெண் ஐடி ஊழியரிடம் ரூ.31.83 கோடி பறிப்பு

 

Advertisement

பெங்களூரு: பெங்களூரு இந்திராநகரில் வசிக்கும் 57 வயதான பெண் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கடந்த 2024 செப்டம்பர் 15ம் தேதி டிஎச்எல் கூரியர் கம்பெனி பிரதிநிதி என்ற பெயரில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், உங்கள் பெயரில் மூன்று கிரெடிட் கார்டுகள், நான்கு பாஸ்போர்ட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம் போதை பொருட்கள் அடங்கிய ஒரு பார்சல் மும்பையின் அந்தேரியில் உள்ள ஒரு கூரியர் மையத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், சிபிஐ அதிகாரி பிரதீப்சிங் என்ற பெயரில் வீடியோகாலில் பேசிய நபர், என்னை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக தெரிவித்தார். அவர் சொன்ன படி, 187 டிரான்சாக்‌ஷன் மூலம் ரூ.31.83 கோடி அனுப்பினேன். நான்கு மாதங்களில் விசாரணை முடிந்தபின், டெபாசிட் செய்த பணம் திருப்பு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றனர். ஆனால் பணம் திருப்பி கொடுக்காததால், மோசடி செய்து பணம் பறித்துள்ளதை புரிந்து கொண்டதாக புகாரில் கூறி உள்ளார்.

Advertisement

Related News