தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு

சென்னை: சமூகவலைத்தளத்தில் டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 85% சதவீதம் பெண்கள் சமூக வலைத்தளம் உள்ளிட்ட ஆன்லைன் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Advertisement

தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுப்படி கோவிட் தொற்றுக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக சைபர் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பெண்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தல், வெறுப்பூட்டும் பேச்சு, புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், மிரட்டல், ஆன்லைனில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசமான விஷயங்களை அனுப்புதல் உள்ளிட்டவை டிஜிட்டல் வன்முறையின் ஒரு பகுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் குறிப்பாக பதின்ம வயது பெண்களே அதிகம் சிக்கி வருகின்றனர். இது அவர்களது மனநலனை வெகுவாக பாதிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் புகார் அளித்தால், சைபர் கிரைம் சட்டம் மூலம் அவர்களை டிஜிட்டல் வன்முறையில் இருந்து பாதுகாக்க முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News