தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டிஐஜி வழக்கை ரத்து செய்ய கோரி மனு நீங்கள் பலமான கட்சிதானே... அவகாசத்துக்கு தயங்குவது ஏன்? சீமானுக்கு நீதிபதி கேள்வி

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டிஐஜி வருண்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதற்கு சீமான் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், வேண்டுமென்றே கால தாமதம் செய்கின்றனர் என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘நீங்கள் ஒரு பெரிய பலமான கட்சி தானே. பின் ஏன் கால அவகாசம் கேட்டால் தயங்குகிறீர்கள்’’ என்றார்.

அப்போது சீமான் தரப்பில், ‘‘காவல் துறை அதிகாரி, எங்கள் கட்சியை அபாயகரமான கட்சி. யாசகம் கேட்கும் கட்சி’’ என்று கூறி வருகிறார் என கூறப்பட்டது. இதையடுத்து மனுவின் மீது இறுதி விசாரணை வரும் 20ம் தேதி நடைபெறும். இருவர் தரப்பிலும் கால அவகாசம் கேட்கக் கூடாது எனக் கூறிய நீதிபதி, இடைக்கால தடையை நீட்டித்து, விசாரணையை தள்ளி வைத்தார்.