தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: வையாவூரில் வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசிக மாவட்ட செயலாளர் தி.வ.ஏழிலரசு, கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தி.வ.ஏழிலரசு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாயூர் ஊராட்சியில் கடந்த 14ம்தேதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 20க்கும் மேற்பட்டோர் தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு 2 பேர் பலியாகினர்.
Advertisement

ஊராட்சி நிர்வாகம் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீருக்காக பயன்படும் கிணற்றை மூடி, ஆழ்துளை குழாய் மூலம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், வையாயூர் ஊராட்சி மீது தனி கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்னைகளை இனிமேல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பிரச்னைக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News