தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீரிழிவு நோய்க்கான முழு சிகிச்சை அளிக்க மெட்டபாலிக் வெல்நஸ் மையம்: காவேரி மருத்துவமனையில் தொடக்கம்

சென்னை: நீரிழிவு நோய்க்கான முழு சிகிச்சை அளிக்க மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வு காண்பதற்கான ஒரு முழுமையான மையமாகும்.

Advertisement

நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும் மருத்துவமனையின் வருடாந்திர பொது விழிப்புணர்வு முயற்சியான ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’-ன் 7வது பதிப்பின் போது இந்த தொடக்க விழா நடைபெற்றது. இந்த மையத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டர். ஐசரி கணேஷ் தொடங்கி வைத்தார்.  இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் முதுநிலை நீரிழிவு மருத்துவர் பரணிதரன் கூறியதாவது:

பெரும்பாலும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை தனித்தனி பிரச்சனைகளாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து, அதாவது மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலிருந்தே உருவாகின்றன. இந்த மையத்தின் மூலம், நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்பகட்ட சிகிச்சைகளை வழங்குவதையும், சிக்கல்கள் உருவாவதற்கு முன்பே தனிநபர்கள் தங்கள் வளர்சிதை மாற்றம் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement