தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மஸ்தலாவில் தொடரும் எஸ்ஐடி சோதனை சிறுமி உடல் புதைக்கப்பட்டதா? புதிய புகார் குறித்து விசாரிக்க முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்தாக கோயில் முன்னாள் துப்புரவு தொழிலாளர் அளித்த புகாரின் பேரில் மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையில் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழியர் அடையாளம் காட்டிய 13 இடங்களில் 10 இடங்களை தோண்டி பார்த்த எஸ்ஐடி குழு 6வது இடத்தில் மனித எலும்புகளை கண்டெடுத்தது.

மேலும் பங்களாகுட்டே மலைப்பகுதியிலும் ஆண், பெண் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேத்ராவதி ஆற்றங்கரையோரம் 11வது இடத்தில் நேற்று தோண்டிய போது எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையில் தர்மஸ்தலாவை சேர்ந்த ஜெயந்த் என்பவர், 15 ஆண்டுக்கு முன்பு சிறுமியின் சடலத்தை போலீசார் வனப்பகுதியில் புதைத்தனர் என்று புகார் கூறியிருந்தார். இது குறித்தும் விசாரிக்க எஸ்ஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related News