தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மஸ்தலாவில் 13வது இடம் இன்று தோண்ட எஸ்ஐடி திட்டம்

பெங்களூரு: தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டுப்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகிறது. சடலங்கள் புதைக்கப்பட்டதாக புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்கள் குறிக்கப்பட்டு, அதில் 12 இடங்களில் தோண்டும் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒரு உடலின் சில எலும்புகளும், ஒரேயொரு மண்டையோடும் மட்டுமே கிடைத்திருக்கிறது.

இதற்கிடையே, பங்காளகுட்டே காட்டுப்பகுதியில் 14வது இடத்தில் தோண்டப்பட்ட நிலையில், அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. 11வது இடத்திற்கு அருகே புகார்தாரர் காட்டிய 11ஏ இடத்திலும் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை பெரியளவில் எதுவுமே கிடைக்காத நிலையில், 13வது இடத்தில் நேற்று தோண்டுவதாக இருந்தது. ஆனால் நேற்று அங்கு தோண்டப்படவில்லை.

ரேடார் கருவி உதவியுடன் இன்று சோதிக்கப்பட்டு, பின்னர் தோண்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று எஸ்.ஐ.டி தலைவர் பிரணாவ் மொஹந்தி தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்.ஐ.டி மேற்கொண்டுவரும் விசாரணை பணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தர்மஸ்தலாவில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News