தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலா மலைப்பகுதியில் மனித எலும்புகள் சிக்கியது: எஸ்ஐடி தீவிர விசாரணை

பெங்களூரு: தர்மஸ்தலாவில் 11வது இடத்தில் தோண்டுவதை நிறுத்திவைத்து புகார்தாரர் காட்டிய மலைப்பகுதியில் தோண்டிய போது மனித எலும்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைத்ததாக கோயில் முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் எஸ்ஐடி குழுவினர் புகார்தாரர் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அடையாளம் காட்டிய 15 இடங்களில் இதுவரை 10 இடங்களை தோண்டி சோதனை செய்தனர்.

Advertisement

அதில் 6வது இடத்தில் மனித எலும்புகள் சிக்கின. இதையடுத்து நேற்று நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள 11, 12, 13 ஆகிய இடங்களை தோண்டி சோதனை செய்ய ஆயத்தப்பணிகளை எஸ்ஐடி குழு மேற்கொண்டது. ஆனால் புகார்தாரர் திடீரென பெலதங்கடி தாலுகா பங்களா குட்டே என்ற மலைப்பகுதிக்கு அழைத்து சென்று ஒரு இடத்தை அடையாளம் காட்டினார். உடனே எஸ்ஐடி குழுவினர் முன்னர் அடையாளம் காட்டிய 11,12,13 இடங்களில் தோண்டும் பணிகளை நிறுத்திவைத்து 20 கூலி தொழிலாளர்கள் உதவியுடன் பங்களாகுட்டே மலைப்பகுதியில் ேசாதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மனித எலும்புகள் சிக்கியது. அதை சேகரித்த எஸ்ஐடி குழுவினர் அதை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Advertisement

Related News