தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைத்ததாக நான் சொன்னது பொய் நீதிபதியிடம் புகார்தாரர் ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தென்கனரா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் அருகே பல பெண்களின் உடல்கள் மர்மமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதாக சின்னய்யா என்பவர் புகார் செய்தார். இது பற்றி விசாரிக்க கூடுதல் போலீஸ் டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. புகார்தாரர் சின்னய்யா கொடுத்த புகார் மற்றும் அவர் காட்டிய 17 இடங்களில் உடல்கள் தோண்டும் பணி 20 நாட்கள் நடத்தப்பட்டது.

Advertisement

ஆனால் புகார்தாரர் கூறியபடி எந்த பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டதற்கான தடயமும் கிடைக்கவில்லை. பல கோடி செலவு செய்தும், உண்மையான சம்பவம் உறுதியாகாமல் இருந்ததால், வேறு வழியில்லாமல் புகார் கொடுத்த சின்னய்யாவை சிறப்பு புலனாய்வு படையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கைது செய்தனர். பெல்தங்கடி கூடுதல் தாலுகா சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எச்.விஜயேந்திரா முன் சின்னய்யா ஆஜர்படுத்தினர்.

அப்போது தர்மஸ்தலாவில் பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார் கொடுக்கும்படி சிலர் என்னை தூண்டி விட்டனர். அவர்கள் பேச்சை கேட்டு நான் பொய் புகார் கொடுத்தேன். என்னை மன்னித்து விடுங்கள். என்று வாக்குமூலம் அளித்தார். இதனிடையில் இப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இந்து அமைப்பை சேர்ந்த மகேஷ்ஷெட்டி திமரோடி, புகார்தாரர் சின்னய்யாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, நேற்று உடுப்பில் உள்ள அவரது வீட்டில், எஸ்ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement

Related News