தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம்; தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா கோரிக்கை

Advertisement

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலாவின் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள புகாரை விசாரணை நடத்த சிறப்பு விாசரணை படை அமைக்க வேண்டும். இந்த புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.கோபாலகவுடா வலியுறுத்தினார்.

இது குறித்து பெங்களூரு பிரஸ்கிளப்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.கோபாலகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தர்மஸ்தலா கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது மனித குலத்தின் மாண்பை சீர்குலைக்கும் புகாராக இருப்பதால், சாமானிய புகாராக எடுத்துள்ள கொள்ளாமல் முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தர்மஸ்தலாவில் நடந்துள்ள சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிய வேண்டுமானால், மாநில அரசு சிறப்பு விசாரணை படை அமைக்க வேண்டும். புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுப்பதை வீடியோவில் பதிவு செய்வதுடன், உடல்களை தடயவியல் மையத்திற்கு அனுப்பி மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். இந்த சோதனை அறிக்கை மற்றும் சோதனை நடத்திய நிபுணர்களின் வாக்கு மூலங்களையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து, சட்டப்படி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.

மேலும் இப்புகாரை விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். சிறப்பு நீதிபதி மற்றும் அரசு வக்கீல் நியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒரு வழக்கு விசாரணையின்போது, நீதி தாமதமாக வழங்கினால், நியாயம் காலாவதியாகிவிடும். ஆகவே எந்த குற்ற வழக்காக இருந்தாலும், அதை உடனுக்குடன் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் கருத்தை ஆதாரமாக எடுத்து கொண்டு, தனி நீதிமன்றத்தின் மூலம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News