தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் முதல்வர், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரை பிடிக்க ஜிமெயில் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்

சென்னை: முதல்வர் வீடு, நடிகை திரிஷா வீடு, பாஜ தலைமை அலுவலகம், கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு என 5 இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு இந்த மின்னஞ்சல் வந்தது. உடனே தேனாம்பேட்டை போலீசார் தலைமையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீடு முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.புரளி என தெரிந்தது. மேலும், கவர்னர் மாளிகை, தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகம், மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் மிரட்டல் வந்தது.

Advertisement

அங்கு நடத்திய சோதனையிலும் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கிண்டி, தேனாம்பேட்டை, மாம்பலம், பட்டினப்பாக்கம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களின் மின்னஞ்சல் அனுப்பும் நபர்களின் விவரங்கள் குறித்து சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் ஜிமெயில் உள்ளிட்ட மின்னஞ்சல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதன்படி, மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களின் உண்மையான மின்னஞ்சல் ஐடி சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பியதும், குற்றவாளிகன் பாஸ்போர்ட்டை முடக்கி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement