தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிண்ணக்கொரை மேலூரில் தெவ்வ திருவிழா

Advertisement

*பாரம்பரிய உடையுடன் படுகரின மக்கள் பங்கேற்பு

மஞ்சூர் : கிண்ணக்கொரை மேலூரில் ‘தெவ்வ திருவிழா’ பாரம்பரிய உடையுடன் படுகரின மக்களால் கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளம் எல்லையில் உள்ளது கிண்ணக்கொரை மேலூர் கிராமம். இப்பகுதியில் படுகரின மக்களின் குல தெய்வமான ஹெரோடையா கோயில் உள்ளது. ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் இந்த கோயிலில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இத்திருவிழாவை, ‘தெவ்வ ஹப்பா’ என குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டிற்கான தெவ்வ திருவிழா கடந்த இரு தினங்களுக்கு முன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய அம்சமாக அரிக்கட்டுதல் மற்றும் குல தெய்வத்திற்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊர் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மேலூர், பிக்கட்டி, ஒசாட்டி, இரியசீகை, அப்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பாரம்பரிய வெள்ளை உடைகளை உடுத்தி வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின மக்கள் காணிக்கை செலுத்தினர்.

தொடர்ந்து பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டி புதியதாக விளைந்த கோதுமை, திணை உள்ளிட்ட பயிர்களை குல தெய்வத்திற்கு படைத்து வழிபட்டார்கள். இதனையடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement