தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Advertisement

குன்றத்தூர்: மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடி மாதம் தொடங்கிய நிலையில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மாங்காட்டில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்களின் வேண்டுதலுக்காக கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செலுத்தினார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து இலவச மற்றும் கட்டண சிறப்பு தரிசனத்திற்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவில் வளாகம் அமைந்துள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வரும் வாரங்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயில் நடை கூடுதல் நேரம் திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement