தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி மாவட்டத்தில் முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: காப்பு கட்டி விரதம் தொடங்கினர்

 

Advertisement

நாகர்கோவில்: கந்தசஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில், பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா இன்று (22ம்தேதி) தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டியை தொடங்கியதை ெதாடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி, தோவாளை செக்கர்கிரி முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சன்னதி, வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் உள்ள முருகன் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் இன்று காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.

விரதம் தொடங்கிய பக்தர்கள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை விரத முறைகளை கடைபிடிப்பார்கள். ஒரு வேளை உணவு மட்டும் உண்டு, காலை மற்றும் மாலையில் நீர் ஆகாரம், பழங்கள் மட்டும் உட்கொண்டு கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட முருகனின் பக்தி பாடல்களை பாடுவார்கள். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ம் தேதி (திங்கள்) நடக்கிறது. அன்றைய தினம் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் பக்தர்கள் நீராடி, விரதத்தை நிறைவு செய்வார்கள். 28ம்தேதி (செவ்வாய்) அனைத்து முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.

Advertisement

Related News