திருத்தணி கோயிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
07:16 PM Aug 08, 2025 IST
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் நாளை நண்பகல் 12 முதல் மாலை 3.30 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவணி அவிட்டத்தை ஒட்டி நாளை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மாலை 3.30 மணிக்கு மேல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.