தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாடு; சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. முக்கிய விஷேச தினங்களில் தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Advertisement

இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும், அதிக மழை காலங்களில் மட்டும் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல, இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை அடிவாரம் வனத்துறை கேட் பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பரிசோதனைக்கு பிறகு மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மலையில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் உடனடியாக மலையில் இருந்து கீழே இறங்கிவிட வேண்டும் எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி செய்திருந்தனர்.

Advertisement

Related News