தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பர்வத மலை கோயிலில் விடியவிடிய பக்தர்கள் தரிசனம்

கலசப்பாக்கம் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பர்வத மலை கோயிலில் விடியவிடிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தென் கைலாயம் என அழைக்கப்படும் 4,560 அடி உயரமுள்ள பர்வத மலை கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ளது.
Advertisement

இம்மலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று விடிய விடிய சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

மேலும், சிறப்பு அலங்காரத்தில் பிரம்மராம்பிகை அம்மன் மற்றும் மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என்பதை வனத்துறையினர் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர்.

மலையேறி செல்ல தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்க வீரபத்திரன் கோயிலில் பக்தர்களின் கைகளில் சக்திக்கயிறு கட்டப்பட்டது. நேற்று இரவு பவுர்ணமி தொடங்கியதால் நள்ளிரவில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. செங்குத்தான கடப்பாரை படி ஏறும்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது.

 

Advertisement

Related News