தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் ஒருவரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலராக நியமிக்க வழக்கு: அறநிலையத்துறை பரிசீலிக்க உத்தரவு

மதுரை: மதுரையை சேர்ந்த மானகிரி செல்வகுமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி அம்மன்கோயிலின் அறங்காவலர் குழுவில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலராக நியமிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக, இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அறங்காவலராக நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக நான் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முந்தைய உத்தரவில், என்னுடைய கோரிக்கையை பரிசீலித்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உத்தரவிட்டது.

Advertisement

இதுவரை எனது கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை, இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஏற்கனவே நீதிமன்றம் அறங்காவலர்கள் நியமனம் குறித்து விதிகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரின் மனு இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை. எனவே மனுதாரர் அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி மீண்டும் மனு கொடுக்க வேண்டும். அதை பரிசீலனை செய்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement