தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவதானப்பட்டி அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே விவசாயிகள் நெல் மணிகளை சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு இரண்டாம் போக சாகுபடி பணிகள் முடிந்து நெல் அறுவடை பணி நடைபெற்றது. மேல்மங்கலத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இங்கு, அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள் கடந்த 40 நாட்களாக கொட்டிவைத்து காத்திருந்தனர்.

Advertisement

கொள்முதல் நிலையத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், வியாபாரிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், கொள்முதல் நிலைய வளாகத்தில் கொட்டியிருந்த நெல் மணிகள் சேதமடைந்துள்ளதாக கூறி அதை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம். இதை கண்டித்து விவசாயிகள் இன்று காலை நெல்மணிகளை பெரியகுளம் சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement