தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேரடியாக ஊட்டிக்கு மாற்றுப்பாதை!!

ஊட்டி: உதகமண்டலம் செல்வதற்கான மாற்றுவழி சாலை பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீசன் நடக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் மலைப்பகுதிக்கு சுமார் 10 முதல் 15 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
Advertisement

அதுமட்டுமின்றி பயண நேரமும் வீணாகிறது என்று சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டத்தை வகுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூருக்கு செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் புறவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 20.5 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. மாற்று பாதையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலை பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ் ,கெந்தலா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் சமவெளியில் இருந்து பல வாகனங்கள் குன்னூர் செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகன நெரிசல் தவிர்க்கப்படும். புதிய மாற்று சாலை பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Advertisement

Related News