நலிந்த பிரிவினர்களுக்கு சேவை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம்: சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றம்
மேலும், பொருளாதார மேம்பாடு, சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டம் 21 செயற்பணிகளை பட்டியலிட்டுள்ளது. தற்போதைய தேவைக்கு ஏற்ப கூடுதல் செயற்பணிகளை குறிப்பிடுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, குடிசை தொழில்களை முன்னேற்றுவதற்கும், குடியிருப்பவர், குழுவாக குடியிருப்பவர்கள், நலிந்த பிரிவினர்கள், பெண்கள், குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, அவ்வப்போது அரசு உருவாக்கும் திட்டங்களுக்குக் கூடுதலாக வீட்டு வசதி, ஊட்டச்சத்து, சுகாதாரம், குடும்ப நல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், தேவையான சேவைகளை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஊராட்சிகளுக்கும், வட்டார ஊராட்சி மன்றத்திற்கு பொருந்தும். இந்த சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.