தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து ரூ.8 கோடியை போலி கையெழுத்திட்டு அபகரித்த 3 வங்கி ஊழியர்கள் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த அர்ஜூன் பாண்டியன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அமெரிக்காவில் எனது உறவினர் தீனதயாளன், அவரது மனைவி சித்ரா ஆகியோர் சார்பில் புகார் அளிக்கிறேன். அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் தீனதயாளன், சித்ரா பெயரில் என்ஆர்இ வங்கி கணக்கு உள்ளது. இதில் இருந்து 6.6.2015 முதல் 6.6.2020 வரை காசோலை மூலம் வங்கி அலுவலர்கள் போலியாக கையெழுத்து போட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ.1.43 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.

Advertisement

எனவே அவர்கள் தனியார் வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, அமெரிக்காவில் வசித்து வரும் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து அவர்களை போன்று போலி கையெழுத்து போட்டு வங்கியில் பணியாற்றி வரும் துணை மேலாளர் வேணுகோபால்(50), வங்கி கணக்காளர்கள் குலோத்துங்கன்(49), தனசேகரன்(41) ஆகியோர் கூட்டு சேர்ந்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புநிதியில் இருந்து மொத்தம் ரூ.8 கோடி வரை 3 ஊழியர்களும் கையாடல் செய்து இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் தனியார் வங்கி துணை மேலாளர் உட்பட 3 ஊழியர்களை அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement

Related News