தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறநிலையத்துறை செயல்பாட்டில் குறையில்லை திமுக ஆட்சியில் ஏராளமான கோயில்களில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பெருமிதம்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று வருகை தந்து அஷ்டாங்க விமானத்திற்கான தங்க தகடை ஒட்டினார்.
Advertisement

பின்பு செய்தியாளர்களிடம், ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், ‘‘இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் என்னை பொருத்தவரை குறை ஒன்றும் தெரியவில்லை. நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இது கலியுகம் என்பதால் கடவுள் எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை. கோயில்கள் அறநிலையத்துறை கையில் இருக்க வேண்டுமா அல்லது வெளியில் போக வேண்டுமா என்பது கடவுளின் இஷ்டம்’’ என்றார்.

அப்போது நிருபர்கள், ‘‘கோயில்களை தனியார் வசம் கொடுக்கலாமா’’ என கேட்டபோது, ‘‘நாம் ஒற்றுமையாக இருந்தால் தகராறு வராது. அரசும் கோயில் விவகாரத்தில் தலையிடாது. நாம் தகராறு செய்வதால் கோயில்களை அரசு எடுக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. அறநிலையத்துறையை கையில் எடுத்துக் கொண்டு இத்தனை கும்பாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நாம் சந்தோஷப்பட வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News