தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகின் முதல் டெங்கு தடுப்பூசி பிரேசிலில் அறிமுகம்

சாவ் பாலோ: உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாகக் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த காய்ச்சலால் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் மற்றும் சுமார் 12,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisement

ஏடிஸ் கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல், தற்போது புதிய பகுதிகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் முயற்சியில் ஒரு மைல்கல்லாக, உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசியான ‘புதான்டன்-டிவி’ பயன்பாட்டிற்குப் பிரேசில் சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. சாவ் பாலோவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசி, 12 வயது முதல் 59 வயதுடையவர்களுக்குச் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

16,000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி கடுமையான டெங்கு பாதிப்பைத் தடுப்பதில் 91.6 சதவீதமும், பொதுவான அறிகுறிகளைக் குறைப்பதில் 80 சதவீதமும் பலன் அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு டோஸ் போடப்பட வேண்டிய சூழலில், இந்த ஒரே தவணை தடுப்பூசி மூலம் வரும் 2026ம் ஆண்டிற்குள் 3 கோடி டோஸ்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News