தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணமதிப்பிழப்புக்கு பின்னர் தங்கத்தை பதுக்கும் பாஜக தலைவர்கள்: அகிலேஷ் யாதவ் பகீர் குற்றச்சாட்டு

 

Advertisement

லக்னோ: பணமதிப்பிழப்புக்குப் பிறகு பாஜகவினர் தங்கத்தைப் பதுக்குவதால்தான் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் பணத்தைச் சேகரித்த பாஜக, இப்போது தங்கத்தைக் குவித்து வருகிறது. பாஜக தலைவர்கள் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளதன் காரணமாகவே அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, சாதாரண மக்கள் சிறிய நகைகளைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘இரட்டை இயந்திர அரசு’ இருந்தபோதிலும் பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பாஜக அரசு அவர்களை ஏமாற்றி வருகிறது. டீசல், பெட்ரோல், மின்சாரம் மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி அவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. பாஜக தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களால் பொதுமக்களுக்குப் பெரிய அளவில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நிர்வாகச் சீர்கேடுகள், ‘இருமல் மருந்து ஊழல்’ தொடர்பான முறைகேடுகள் மற்றும் மதுபானக் கடத்தல் அதிகரித்துள்ளது’ என்று அவர் கூறினார்.

Advertisement

Related News