தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமங்கலத்தில் அணுகுச் சாலை அமைப்பதற்காக வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு: போக்குவரத்து மாற்றம்

 

திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே மேம்பால பணியில் அணுகுச் சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வணிக கட்டிடங்கள் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மின்சப்ளை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் விமான நிலைய ரோட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தேவர் சிலை அருகே துவங்கும் மேம்பாலம் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையம் பகுதியில் நிறைவடையும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் ரோட்டிற்காக திருமங்கலம் யூனியன் அலுவலகத்தின் போர்டிகோ இடிக்கப்பட உள்ளது.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் பாதை முற்றிலும் தடைப்படும் என்பதால், யூனியன் அலுவலகம் உச்சபட்டி பஞ்சாயத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுரி பகுதிக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஜேசிபி இயந்திரம் மூலமாக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வணிக வளாக கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது அலுவலகத்திற்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய சாலை முற்றிலும் மூடப்பட்டு தேவர் சிலையின் வலதுபுறம் புதிதாக அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடு வழியாக காமராஜபுரம், கற்பகநகர் பகுதிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யூனியன் அலுவலக வளாகத்தில் இருக்கும் வேப்பமரத்தை அகற்றிய பின் போர்டிகோவை இடிக்கும் பணி துவங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

 

Related News