தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: ஜனநாயகத்தில் வெற்றி, தோல்விகள் சகஜம் என்று இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இங்கிலாந்தில் நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி, ஆட்சியில் இருந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்திய வம்சாவளியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
Advertisement

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் பதவியேற்றார். இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னாள், இந்தாள் என இரண்டு பிரதமர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர்க்கு எழுதிய கடிதத்தில், `தொழிலாளர் கட்சிக்கும் தனிப்பட்ட ரீதியிலும் உங்களின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வெற்றி மக்களை முதன்மைப்படுத்தும் அரசியலின் சக்திக்கு ஒரு சான்றாகும். மேலும் இந்தியா - இங்கிலாந்து இருதரப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல் ரிஷி சுனக்கிற்கு எழுதியிருக்கும் மற்றொரு கடிதத்தில், `சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்துகளை நீட்டிக்க விரும்புகிறேன். வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் இரண்டும் ஜனநாயகத்தில் பயணத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும். இரண்டையும் நாம் நமது முன்னேற்றத்துக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவையில் உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் அனுபவத்துடன் பொது வாழ்வில் தொடர்ந்து பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Related News